Sunday, 14 July 2013

இந்தியில் மீண்டும் - தனுஷ்

ராஞ்சனாவுக்கு பிறகு தனுஷ் மீண்டும் இந்தியில் நடிக்கவுள்ளார் . தமிழில் அம்பிகாபதி பெயரில் வெளியான "ராஞ்சனா" இந்தியில் அமோக வெற்றி பெற்றிருப்பதால் அடுத்து இந்தியில் எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறார் தனுஷ்.

அதோடு, இந்தியில் முதல் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து நடிப்பது என்ற முடிவை ஏற்கனவே எடுத்திருந்த தனுஷ், இப்போது முதல் வெற்றியினால் இதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்.

அதனால், ராஞ்சனாவில் நடித்து முடித்து வந்தவர், மரியானை முடித்தது மட்டுமில்லாமல் இப்போது நய்யாண்டி படத்தையும் முடித்துக்கொடுத்து விட்டாராம். இன்னும் பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அடுத்த மாதம் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பதால்தான் இந்த மின்னல் வேகமாம்.

அதையடுத்து புதிய இந்திப்பட வேலைகளும் தொடங்குவதால் கே.வி.ஆனந்த் படத்தை முடிக்கிற வரை அக்கம் பக்கம் அசைவதாக இல்லையாம் தனுஷ். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று படப்பிடிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கப்போகிறாராம்.




thanks http://123tamilcinema.com

No comments:

Post a Comment